Google apps
Main menu

"இன்னும் ஒரு நூறாண்டு இரும்"

7 Comments -

1 – 7 of 7
Blogger ஜீவி said...

அன்புள்ள திரு. மாலன்,
நான் ஆனந்தவிகடனிலும், கல்கியிலும்
கி.ரா.வின் சில கதைகளை அவைகள்
பிரசுரமான நேரத்துப் படித்திருந்தாலும்
நீங்கள் இப்பொழுது உள்வாங்கிக் கொண்ட வாக்கில், அவற்றை மனசில்
தேக்கிக் கொண்டதில்லை. அப்பொழுதிய வயசும், சூழ்நிலைகளும்
காரணமாக இருக்கலாம்.
பெரியவர் கி.ரா. எழுத்து பற்றிய உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து
கொண்டமைக்கு நன்றி.

9:00 pm

Blogger ஹரன்பிரசன்னா said...

//கி.ரா.வின் கதவு ஞாபகம் வந்தது. அப்பா வேலை தேடி மணிமுத்தாறு பக்கம் போயிருக்கிறார். வறுமைக்குப் பிறந்த குழந்தைகள் லட்சுமியும் சீனுவாசனும் எந்தக் கவலையுமின்றி கதவை பஸ்ஸாக பாவித்து விளையாடுகிறார்கள். அதைத் தீப்பெட்டிப் படம் கொண்டு அழகு படுத்துகிறார்கள். தீர்வை பாக்கிக்க்காக அந்தக் கதவு ஓர் நாள் 'ஜப்தி' செய்யப்படுகிறது, திறந்து கிடக்கும் வீட்டில் இருந்த கைக் குழந்தை குளிர்காற்றைத் தாங்கமுடியாமல் ஜுரம் கண்டு இறந்து போகிறது. ஒருநாள் லட்சுமியும் சீனிவாசனும் கதவை ஒருநாள் சாவடி அருகில் கேட்பாரற்றுக் கிடக்கும் கதவைக் 'கண்டெடுக்கிறார்கள்'. லட்சுமி தன் பாவடையால் அதில் படர்ந்திருந்த கரையான்களைத் துடைக்கிறாள். அவர்களின் கரங்கள் கதவை இறுகப் பற்றிக் கெ஡ண்டிருந்தன எனக் கதை முடிகிறது.//

ஏதோ ஒரு இடத்தில் பதேர் பாஞ்சாலியைத் தொட்டுச் செல்வது போலத் தெரிகிறது. இது எல்லா எழுத்தாளர்களுக்குமே நிகழக்கூடிய ஒன்றுதான். ஜஸ்ட், சொன்னேன்.

கி.ரா. சிறந்த படைப்பாளி என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. எளிமையான வார்த்தைகளில் சொல்லாடல்களில் ஆழமான உணர்வுகளைச் சட்டென ஏற்படுத்திவிடுவதில் அவரது கதைகள் என்றுமே தவறுவதில்லை.

நன்றி,
பிரசன்னா

9:34 pm

Blogger ஆடுமாடு said...

நகரத்து குப்பையில் பிழைக்க வந்த பிறகு, தொலைந்து போன, ஆனால் தொலையாமல் இருக்கிற நினைவுகளோடு வாழும் என் போன்றோருக்கு கி.ரா.வின் புத்தகங்கள்தான் ஆறுதல். அவரை நினைவு படுத்தியதற்கு நன்றி. உங்களுக்கு கதவு. எனக்கு கிடை.

7:13 pm

Blogger Sanjai Gandhi said...

//அந்தக் கிராமத்திலிருந்து விடைபெறும் போது மனம் கரைந்து விட்டிருந்தது. என்ன மாதிரியான மனிதர்கள்! சோற்றுக்கு வழியில்லாமல் ஊரை விட்டுத் துரத்தும் வாழ்க்கை. அந்த வறுமையிலும் வந்தவனுக்கு ஏதோ தின்னக் கொடுத்து, அதை அவன் ரசித்து உண்கிறானா என ஓசைப்படாமல் கணித்து, அதை அவனது விருப்பத்திற்கு ஏற்பப் பதப்படுத்தி.... என்ன மாதிரியான மனிதர்கள்!//

என்ன தான் ஜாதி, மத , இன ரீதியில் பிரிக்கப் பட்டிருந்தாலும், மொழி மற்றும் தண்ணீர் பிரச்சனைகள் போன்றவை நம்மை எதிரிகளாக( சில கனங்களில்) நினைக்க வைத்திருந்தாலும் இந்த உபசரிக்கும் குணமும் வந்தோரை உறவினர்களாக பாவித்து உபசரிக்கும் குணமும் தான் இன்னும் இந்தியாவை கூறு போடாமல் வைத்திருக்கிறது.

3:51 pm

Blogger RAGUNATHAN said...

கதவு கதை பள்ளியில் படித்து. அதுவும் ஒரு துணை பாடமாக. உங்கள் பதிவை படித்ததும் என் பள்ளி நினைவுகளின் கதவும் திறந்து கொண்டது.

5:49 pm

Blogger தமிழ்ச் செல்வன்ஜீ said...

maalan ayya vanakkam! ennai neengal maranthirukkalam, kaalamum ungal kadamaikalum en pondra siriyavanai markka seithirukkalaam! aanal thinamanikathiril neengal veliyittu ennai arimugam seitha `mukkonathil moondrum neer koodukalea` kathaiyum ` ungalai vegu thoorathil irunthu oru egalaivanai pola paarthu kondu irulkkum naanum marakkavillai!marakka mudiyathu! tharseyalaga ayya ki raa patri valaiyil thediya pothu ungal valaithalam vanthu adinthen! nandri-vallam thamilselvan

12:00 am

Anonymous chandrasekaran said...

kandipaga இன்னும் ஒரு நூறாண்டு இரும் ...

10:01 pm

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறையையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கில்லை. பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும்.நீக்கப்பட்ட விவரம் பின்னூட்டத்தில் குறிப்பிடப்படும்
You can use some HTML tags, such as <b>, <i>, <a>

Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.

You will be asked to sign in after submitting your comment.